Sunday, February 26, 2012

சிவ தரிசனம் செய்ய ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது


சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்;
அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை)
அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி,
அதிலும் சிறந்தது பிரதோஷ காலம்.
பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.
பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை.
பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்;
பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.

No comments:

Post a Comment