Monday, August 13, 2012

ராகு-கேது பரிகாரத் தலம் பூவரசங்குப்பம்

மனித வாழ்வில் யோகம், மகிழ்ச்சி, ஞானம், முக்தி ஆகியவற்றை நிர்ணயிக்கின்ற சக்தி ராகு-கேது என்கிற இரண்டு கிரகங்களுக்கும் உண்டு. இவை தோஷத்தை மட்டும் தராமல் யோகத்தை வழங்குவதிலும் நிகரற்றவை. நாகதோஷம் இருக்கும்போது, எவ்வளவு ஆற்றலும் முயற்சியும் இருந்தாலும் முன்னேறுவது கடினம் என்கிறது ஜோதிடம். திருமணத் தடையும் இதனாலேயே ஏற்படுகிறது. இந்த தோஷங்களிலிருந்து விடுபட காளஹஸ்திக்குச் சென்று சர்ப்ப தோஷ நிவர்த்தியும் பரிகாரமும் செய்கின்றனர்.

 அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள சிவலோகநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ராகு-கேது பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. இத்தலத்தை நடுநாட்டு திருநாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றும் போற்றுகிறார்கள். பல்லவ மன்னன் ஒருவன் சைவ-வைணவ ஆலயங்களை இடித்ததால், நரஹரி என்ற முனிவரின் சாபம் ஏற்பட்டது. சாப விமோசனம் வேண்டி அவன் முனிவரைத் தேடிப் போனபோது ஒரு பூவரசு மரத்தின் கீழ் தங்கினான். மரத்தினின்று கீழே விழுந்த ஒரு பூவரசு இலையில் லட்சுமி நரசிம்மர் ஆவிர்பவித்திருப்பதைக் கண்டு திகைத்தான். உடனே, நரசிம்மருக்கு அங்கேயே ஆலயம் எழுப்பினான். பூவரசு இலையில் நரசிம்மர் தோன்றியதால் இந்த தலத்திற்கு பூவரசங்குப்பம் என்கிற பெயர் ஏற்பட்டது.

இங்குள்ள பழமையான சிவாலயத்தில் நாகநாதேஸ்வரர், கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இறைவி, சிவலோக நாயகி. சிதிலமடைந்து கிடந்த இந்தப் பழமையான ஆலயத்தை பக்தர்கள் திருப்பணிகள் பல செய்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். நாகேஸ்வரரின் வலப்பக்கம் தனி சந்நதியில் தெற்கு நோக்கி அம்பாள் காட்சியளிக்கிறாள். வெளிப் பிராகாரத்தில் தனிச் சந்நதிகளில் ராகு-கேது, தம் தேவியருடன் எழுந்தருளியிருக்கின்றனர். இத்தலம் இங்கு தோன்றியதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் கூறப்படுகிறது. பல்லவ மன்னனான சிம்மவர்மன் பல இடங்களில் ஆலயங்களைக் கட்டும் பொருட்டு காடுகளையும் மலைகளையும் சீர் செய்தான். அப்போது அங்கு வசித்து வந்த நாகங்களைக் கொல்ல நேர்ந்தது. அதனால் அவனுக்கும் அவன் வம்சத்திற்கும் நாகதோஷம் ஏற்பட்டது. இங்குள்ள தட்சிண பினாகினி என்ற தென்பெண்ணை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த சிவஹரி என்ற முனிவரைச் சந்தித்து அவர் அறிவுரையைக் கேட்டான்.

அந்த முனிவர் பூவரசங்குப்பத்தின் ஒரு மூலையில் புற்று ஒன்றில் சுயம்புவாக உள்ள சிவலிங்கத்தை நாகமொன்று பூஜித்து வருகிறது என்றும் அங்கு சென்று நாகத்தை வழிபட்டு, சிவலிங்கத்தை எடுத்து ஆலயம் எழுப்பினால் நாகதோஷம் நீங்கும் என்றும் கூறினார். மன்னனும் நாகத்தை வழிபட்டான். அந்த கருநாகம் வெளியே தோன்றி, ‘‘ஈசனின் பெயரோடு தன் பெயரையும் இணைத்து நாகேஸ்வரர் என்று பெயர் சூட்டி ஆலயம் அமைத்து வழிபடு’’ என்றது. அதற்கு மன்னனும் சம்மதிக்க, அந்த நாகம் தன் குட்டிகளுடன் புற்றிலிருந்து வெளியேறியது. மன்னன் புற்றை அகற்றி சிவலிங்கத்தைக் கண்டெடுத்து பிரம்மபாகம், விஷ்ணுபாகம் ஆகியவற்றைச் செய்து கருங்கல் ஆலயம் அமைத்தான். ஈசனுக்கு நாகேஸ்வரர் என்று பெயரிட்டு குடமுழுக்குச் செய்தான். குடமுழுக்கு நாளன்று புற்றிலிருந்த நாகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிக் கொண்டு காட்சி அளித்து, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் மன்னனின் வேண்டு கோளின்படி பக்தர்களின் கண்களில் படாமல் இன்றும் நாகநாதரை அது பூஜித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த நாகத்தால் இதுவரை எந்தவித இடையூறும் ஆபத்தும் ஏற்பட்டதில்லையாம். இப்போதும் அரிதாக அந்த நாகம் பக்தர்களின் கண்களுக்குத் தோன்றி அருட்காட்சி அளிப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். மேலும் நாகதோஷம், காலசர்ப்ப தோஷங்களையும் போக்கி இந்த ஈசன் அருள்பாலித்து வருகிறார்.

நாளடைவில் ஆலயம் பழுதாகி, மீண்டும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் விநாயகர், நந்தீசர், சண்முகர், வள்ளி - தெய்வானை சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டனவாம். கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் அனைத்தும் கருங்கற்கள் திருப்பணிகளே. அர்த்த மண்டபத்தில், கருவறை நுழைவாயிலின் இருபுறங்களிலும் செந்தூர விநாயகரும் தண்டபாணியும் காட்சி அளிக்கின்றனர். பால கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் பெருமாள், வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோரும் உள்ளனர். இடையில் சண்டிகேஸ்வரர் சந்நதி உள்ளது. வடமேற்கே வள்ளி-தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார். வேண்டிய வரங்களை தன் பக்தர்களுக்கு அருளும் பாவனையில், உடனே புறப்படத் தயாராகும் நிலையில் காட்சி தருகிறார். வடகிழக்கில் நவகிரக சந்நதி உள்ளது. பைரவர் மேற்கு பார்த்தும் தென்கிழக்கில் சூரியன், ராகு-கேதுவைப் பார்த்தபடி நாகதேவியும் அருள்பாலிக்கின்றனர்.

ராகு பகவான் தனி சந்நதியில் தன் தேவியர் சித்ரலேகா, சிம்ஹியுடன் கிழக்கு நோக்கி சந்நதி கொண்டுள்ளார். கேது பகவானும் இவர்களுக்குக் காவலாக எட்டு நாகங்களும் உள்ளன. நடுநாட்டு நாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் நாகேஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று விசேஷ வழிபாடுகளும் ராகு-கேது கிரகங்களுக்கு சர்ப்ப சாந்தி ஹோமங்களும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன. ஆலயத்தைப் பற்றிய இதர விவரங்களுக்கு 9442010834 மற்றும் 9486748013 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. 

Tuesday, May 8, 2012

நாகதோஷம் போக்கும் நடுநாட்டு காளஹஸ்தி என்கிற பூவரசங்குப்பம்.


மனித வாழ்வில் யோகம், மகிழ்ச்சி, ஞானம், முக்தி ஆகியவற்றை நிர்ணயிக்கின்ற சக்தி ராகு-கேது என்கிற இரண்டு கிரகங்களுக்கும் உண்டு. இவை தோஷத்தை மட்டும் தராமல் யோகத்தை வழங்குவதிலும் நிகரற்றவை. நாகதோஷம் இருக்கும்போது, எவ்வளவு ஆற்றலும் முயற்சியும் இருந்தாலும் முன்னேறுவது கடினம் என்கிறது ஜோதிடம். திருமணத் தடையும் இதனாலேயே ஏற்படுகிறது. இந்த தோஷங்களிலிருந்து விடுபட காளஹஸ்திக்குச் சென்று சர்ப்ப தோஷ நிவர்த்தியும் பரிகாரமும் செய்கின்றனர். 

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள சிவலோகநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ராகு-கேது பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. இத்தலத்தை நடுநாட்டு திருநாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றும் போற்றுகிறார்கள். பல்லவ மன்னன் ஒருவன் சைவ-வைணவ ஆலயங்களை இடித்ததால், நரஹரி என்ற முனிவரின் சாபம் ஏற்பட்டது. 

சாப விமோசனம் வேண்டி அவன் முனிவரைத் தேடிப் போனபோது ஒரு பூவரசு மரத்தின் கீழ் தங்கினான். மரத்தினின்று கீழே விழுந்த ஒரு பூவரசு இலையில் லட்சுமி நரசிம்மர் ஆவிர்பவித்திருப்பதைக் கண்டு திகைத்தான். உடனே, நரசிம்மருக்கு அங்கேயே ஆலயம் எழுப்பினான். பூவரசு இலையில் நரசிம்மர் தோன்றியதால் இந்த தலத்திற்கு பூவரசங்குப்பம் என்கிற பெயர் ஏற்பட்டது.

இங்குள்ள பழமையான சிவாலயத்தில் நாகநாதேஸ்வரர், கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இறைவி, சிவலோக நாயகி. சிதிலமடைந்து கிடந்த இந்தப் பழமையான ஆலயத்தை பக்தர்கள் திருப்பணிகள் பல செய்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். நாகேஸ்வரரின் வலப்பக்கம் தனி சந்நதியில் தெற்கு நோக்கி அம்பாள் காட்சியளிக்கிறாள். வெளிப் பிராகாரத்தில் தனிச் சந்நதிகளில் ராகு-கேது, தம் தேவியருடன் எழுந்தருளியிருக்கின்றனர். இத்தலம் இங்கு தோன்றியதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் கூறப்படுகிறது. 

பல்லவ மன்னனான சிம்மவர்மன் பல இடங்களில் ஆலயங்களைக் கட்டும் பொருட்டு காடுகளையும் மலைகளையும் சீர் செய்தான். அப்போது அங்கு வசித்து வந்த நாகங்களைக் கொல்ல நேர்ந்தது. அதனால் அவனுக்கும் அவன் வம்சத்திற்கும் நாகதோஷம் ஏற்பட்டது. இங்குள்ள தட்சிண பினாகினி என்ற தென்பெண்ணை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த சிவஹரி என்ற முனிவரைச் சந்தித்து அவர் அறிவுரையைக் கேட்டான்.

அந்த முனிவர் பூவரசங்குப்பத்தின் ஒரு மூலையில் புற்று ஒன்றில் சுயம்புவாக உள்ள சிவலிங்கத்தை நாகமொன்று பூஜித்து வருகிறது என்றும் அங்கு சென்று நாகத்தை வழிபட்டு, சிவலிங்கத்தை எடுத்து ஆலயம் எழுப்பினால் நாகதோஷம் நீங்கும் என்றும் கூறினார். மன்னனும் நாகத்தை வழிபட்டான். அந்த கருநாகம் வெளியே தோன்றி, ‘‘ஈசனின் பெயரோடு தன் பெயரையும் இணைத்து நாகேஸ்வரர் என்று பெயர் சூட்டி ஆலயம் அமைத்து வழிபடு’’ என்றது. அதற்கு மன்னனும் சம்மதிக்க, அந்த நாகம் தன் குட்டிகளுடன் புற்றிலிருந்து வெளியேறியது. மன்னன் புற்றை அகற்றி சிவலிங்கத்தைக் கண்டெடுத்து பிரம்மபாகம், விஷ்ணுபாகம் ஆகியவற்றைச் செய்து கருங்கல் ஆலயம் அமைத்தான். 

ஈசனுக்கு நாகேஸ்வரர் என்று பெயரிட்டு குடமுழுக்குச் செய்தான். குடமுழுக்கு நாளன்று புற்றிலிருந்த நாகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிக் கொண்டு காட்சி அளித்து, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் மன்னனின் வேண்டு கோளின்படி பக்தர்களின் கண்களில் படாமல் இன்றும் நாகநாதரை அது பூஜித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

அந்த நாகத்தால் இதுவரை எந்தவித இடையூறும் ஆபத்தும் ஏற்பட்டதில்லையாம். இப்போதும் அரிதாக அந்த நாகம் பக்தர்களின் கண்களுக்குத் தோன்றி அருட்காட்சி அளிப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். மேலும் நாகதோஷம், காலசர்ப்ப தோஷங்களையும் போக்கி இந்த ஈசன் அருள்பாலித்து வருகிறார்.

நாளடைவில் ஆலயம் பழுதாகி, மீண்டும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் விநாயகர், நந்தீசர், சண்முகர், வள்ளி - தெய்வானை சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டனவாம். கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் அனைத்தும் கருங்கற்கள் திருப்பணிகளே. அர்த்த மண்டபத்தில், கருவறை நுழைவாயிலின் இருபுறங்களிலும் செந்தூர விநாயகரும் தண்டபாணியும் காட்சி அளிக்கின்றனர். 

 பால கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் பெருமாள், வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோரும் உள்ளனர். இடையில் சண்டிகேஸ்வரர் சந்நதி உள்ளது. வடமேற்கே வள்ளி-தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார். வேண்டிய வரங்களை தன் பக்தர்களுக்கு அருளும் பாவனையில், உடனே புறப்படத் தயாராகும் நிலையில் காட்சி தருகிறார். வடகிழக்கில் நவகிரக சந்நதி உள்ளது. பைரவர் மேற்கு பார்த்தும் தென்கிழக்கில் சூரியன், ராகு-கேதுவைப் பார்த்தபடி நாகதேவியும் அருள்பாலிக்கின்றனர்.

ராகு பகவான் தனி சந்நதியில் தன் தேவியர் சித்ரலேகா, சிம்ஹியுடன் கிழக்கு நோக்கி சந்நதி கொண்டுள்ளார். கேது பகவானும் இவர்களுக்குக் காவலாக எட்டு நாகங்களும் உள்ளன. நடுநாட்டு நாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் நாகேஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று விசேஷ வழிபாடுகளும் ராகு-கேது கிரகங்களுக்கு சர்ப்ப சாந்தி ஹோமங்களும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன. 

ஆலயத்தைப் பற்றிய இதர விவரங்களுக்கு 9442010834 மற்றும் 9486748013 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தலம் (பூவரசங்குப்பம்) விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. 

Saturday, April 28, 2012

பிழைகளுக்கெல்லாம் தலையாய பெரிய பிழை எது.

* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக் கெல்லாம் தலையாய பெரிய பிழை அறிவு தரும் நல்ல நூல் களைக் கல்லாமையே ஆகும். நல்ல நூல்களைக் கற்கும் போது, அறிவு மேம்படும். அதனால் தான் இறை வனை கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி என்பர்.

* மனிதனை உயர்த்துவது பணமன்று, பதவியும் அன்று, குலமும் அன்று, பருமனும் அன்று, உயரமும் அன்று. அது எதுதான் என்றால் அறிவு மட்டுமே. வள்ளுவர் இதனையே அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று குறிப்பிடுவார்.

* மலை புரண்டுவரினும், கடல் கொந்தளித்துப் பொங்கி னாலும், வானம் இடிந்து தலை மீது விழுந்தாலும் தர்மம் காட்டிய நல் வழியில் சத்தியத்தை விடாது கொண்டி ருக்கும் செயலே வீரச் செயலாகும்.


* பொறுமை கடலினும் பெரிது என்பர். பொறுமை ஒருவனுக்கு புகழைத் தரவல்லதாகும். புண்ணியவான்களிடமே பொறுமை குடிகொண்டிருக்கும்.


உலகம் கூட அழிந்துவிடும். ஆனால், பொறுமை மிக்கவரின் புகழ் அழிவதில்லை.

* மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் இரண்டாகும். அவை அறவழியில் செலவழித்த பொருளும், பூஜைக்காக செலவழித்த நேரமும் ஆகும்.

-வாரியார்

Wednesday, April 18, 2012

நம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி.

கெட்ட பழக்கங்கள் வருவது எளிது. அவற்றை எப்படி விடுவது என்று தெரியாமல் நாள்தோறும் சிலர் திண்டாடிக் கொண்டிருகின்றனர். 

அதற்கு ஞானி ஓருவர் கூறிய எளிய வழி ..
 
ஒருசமயம் பக்தன் ஒருவன், ஞானியிடம் சென்று தனக்கு ஏற்பட்ட சூதாடும் பழக்கத்தை எப்படி விடுவது என்று கேட்டான். 

ஞானி உடனே தன் பக்கத்தில் உள்ள ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூண் என்னை விடமாட்டேன் என்கிறதே! என்றார். 

 பக்தன், சுவாமி! நீங்கள் தூணை விடவேண்டியதுதானே! ஏன் விடமாட்டேன் என்கிறீர்கள்? என்றான். 

இதுபோலத்தான் நீயும் கெட்ட பழக்கத்தைவிட வேண்டும். அது உன்னை பிடித்துக்கொண்டு இருக்கவில்லை. 

நீதான் அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறாய் எனக் கூற, பக்தன் சூதாடும் பழக்கத்தை விட்டுவிட்டான். 

எனவே எந்த தீய பழக்கமும் நன்மை பிடிக்க வில்லை.நாம் தான் அவற்றை பிடித்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.

Tuesday, April 10, 2012

திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்.

1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று  பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

 எத்தனை எத்தனை கோவிந்தன்கள்! :

திருப்பதி திருமலையில் த்ருவ ஸ்ரீநிவாசர், போக ஸ்ரீநிவாசர், கொலுவு ஸ்ரீநிவாசர், உக்ர ஸ்ரீநிவாசர், மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி


இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி


கொலுவு என்றால் ஆஸ்தானம் என்று பொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி


இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

Thursday, April 5, 2012

பில்லி, சூன்யம், ஏவல் தொல்லைகளில் இருந்து விடுபட

எங்கெல்லாம் சரபேசரின் சிலை உள்ளதோ,  அங்கெல்லாம் ஸ்ரீ கவச ஜலூசர் என்னும் சித்தரின் ஆத்மா , சிலை வடிக்கும் போதே உள்ளே புகுந்து விடுகிறது.
தனி சிலையாக இருந்தாலும், தூணில் இருந்தாலும் ....



அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில் - திருப்புவனம் 

 
சரபேசர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள் என்று காண்போம்..

ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுகிறது.

இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள்.

சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். 

இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது.  சிதம்பரம் கோவிலில்  தனிச் சன்னதி உள்ளது.  

ஞாயிற்றுக் கிழமை , தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் - சரபேசர் வழிபாட்டில் , கலந்து கொள்ளுங்கள்...

ஞாயிற்று கிழமை - பிரதோஷம் வந்தால் , தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்..  அபரிமிதமான பலன்கள் ஏற்படும்..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் , நவக்கிரக சந்நிதி அருகில் - சரபேசர் சிலை , தூணில் உள்ளது... மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்..

சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.

சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.
 
நன்றி:http://www.livingextra.com/2011/02/blog-post_7490.html


Sunday, March 25, 2012

அர்த்தமுள்ள இந்துமதம். இரக்கமென்றொரு பொருளில்லா அரக்கர்’கண்ணதாசன்


கண் வெயிலைப் பார்க்கும்; மனம் மழையை நினைக்கும்; வாய் பனியைப் பற்றிப் பேசும்.

இத்தனைக்கும் எல்லா அங்கங்களும் ஒரே உடம்பில் தான் இருக்கின்றன.

கண்ணொன்று காண, மனம் ஒன்று நாட, வாயொன்று பேசஎன்று பாடினார்கள்.

அப்படிப்பட்ட வஞ்சகர்கள் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்!

முகத்துக்கு முன்னால் சிரிப்பார்கள்; முதுகிற்குப் பின்னால் சீறுவர்கள். பக்கத்தில் இருந்து கொண்டே, ‘எப்போது கவிழ்க்கலாம்என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்ட வஞ்சகர்கள் எவ்வளவு பேரை நான் பார்த்திருக்கிறேன்?

அவர்களைப் பற்றி எச்சரித்து எத்தனைப் பாடல்கள் எழுதியிருக்கிறேன்?

சிலரை நான் நம்பாமல் இருந்தாலும், மற்றும் சிலரை நம்பி இருந்தாலும் எனக்கு இத்தனைக் கஷ்டங்கள் வந்திருக்காது.

பெதடின் போட்டு உடம்பைக் கெடுத்துக் கொண்டிருக்க மாட்டேன்; பணத்துக்குச் சிரமப்பட்டிருக்கவும் மாட்டேன்.

ஏற்கெனவே நான் கூறியபடி, எனது வாழ்க்கை வரலாற்றுக்கு வனவாசம்என்ற தலைப்பைவிடஒரு முட்டாளின் சுயசரிதம்என்ற தலைப்பை பொருத்தமானது.

ஆனால் அந்த முப்பது ஆண்டுகளில் நான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள்தான், இன்று எழுத்துக்களாகப் பரிணமிக்கின்றன.

பாண்டவர்கள் கெளரவர்களால் வஞ்சிக்கப்பட்டாமல் இருந்திருந்தால், பகவானுடைய திருஷ்டி அவர்கள் மேல் விழுந்திருக்கப் போவதில்லை; பாரத யுத்தமும் நடந்திருக்கப் போவதில்லை.

நானும் பல பேரால் வஞ்சிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்து மதச் சிந்தனை எனக்கு இந்த அளவுக்குத் தோன்றி இருக்கப் போவதில்லை.

எனது தர்க்க அறிவை நான் விருத்தி செய்து கொள்ள வஞ்சகர்களும், துரோகிகளுமே துணையாக இருந்தார்கள்.

அவர்கள் நேரடி எதிரிகளாக இருந்திருந்தால் நான் சமாளித்திருப்பேன். மித்ர துரோகிகளாக இருந்ததாலேயே சங்கடப்பட வேண்டி வந்தது.

புராண இதிகாசங்களிலோ, அரக்கர்கள் நேரடி எதிரிகள். அவர்களை நம்பலாம்; நம்ப முடியாதவன் நண்பன் மட்டுமே.

அதனால்தான் இராமலிங்க அடிகளார், ‘உத்தமர்தம் உறவு வேண்டும்என்று பாடினார்.

நல்லவர்கள் சேர்ந்து ஒழுகுவது பற்றி வள்ளுவனும் கூறினான்.

வஞ்சக நெஞ்சங்களைக் கம்பனும் பாடினான்.

கள்ளத்தைக் கருவறுக்க, கபடத்தை வேரறுக்க, வஞ்சத்தை வெட்டி வீழ்த்த இந்து மதம் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல.

இருந்தும் அது முன்னைவிட அதிகமாகி விட்டது!

இந்தியப் பொருளாதாரத்தின் பலவீனத்தால், சிறுபருவத்திலேயே மனிதன் வஞ்சகனாகி விடுகிறான்.

கற்பழித்துக் கொலை செய்வதும், காதறுத்து நகை திருடுவதும் சகஜமாகி விட்டன.

இரக்கமென் றொருபொரு ளில்லா அரக்கர்என்றான் கம்பன்.

இரக்கமற்றவர்கள் இப்போது நிறைந்து காணப்படுகிறார்கள்.

ஒரு வேளைச் சோறு தாயேஎன்று சத்தம் போடும் பிச்சைக்காரனுக்குச் சோறு போட மறுக்கிறார்கள்.

ஒரு நண்பர் ஒருவர் மேடைகளிலே ஏழைகளைப் பற்றி மிக உருக்கமாகப் பேசுவார். ஒரு பிச்சைக்காரனுக்கும் காலணா போட்டதில்லை. எந்தக் கொடுஞ்செயலிலும் துணிந்து இறங்குவார். ஆனால் அவரையும் பலர் நம்புகிறார்கள்.

சாகக் கிடக்கும் உயிருக்குக் கூடப் பணம் கொடுத்தால் தான் வருவேன்என்று பிடிவாதம் பண்ணும் டாக்டர்கள்-

ஜெயிக்கக் கூடிய வழக்கைக் கூட பணம் கொடுக்காததால் தோற்கடிக்கும் வக்கீல்கள்-

நண்பனோடு பழகி, அவனது மனைவியையே கெடுத்து விடும் தலைவர்கள்-

ஒன்றா, இரண்டா?

லட்ச ரூபாயைத் திருட்டுத்தனமாகச் சம்பாதித்து, இருபதாயிரம் ரூபாயைத் திருப்பதி உண்டியலிலே போட்டு விடுவதால், வெங்கடாசலபதி திருப்தியடைவதில்லை.

மனிதாபிமானத்தை நேசிக்காதவர்கள், நான் முன் பகுதியில் கூறியபடி, நரகவாசிகளே!

நான் பார்த்தவரையில் இரண்டு வகையான நீதிபதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

ஒரு வகையினர் குற்றவாளிகளைக் கூட விடுதலை செய்து விடுகிறார்கள். இன்னொரு வகையினர், நிரபராதிகளைக் கூடத் தண்டித்து விடுகிறார்கள்.

வழக்கின் தன்மையைவிட, நீதிபதியின் மனபோக்கே நியாய அநியாயங்களுக்குக் காரணமாகி விடுகிறது.

கூர்மையான கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு மென்மையான குழந்தையிடம் விளையாட்டுக் காட்டுகிறோம் என்பதை, அவர்கள் மறந்து போய் விடுகிறார்கள்.

முதலாவது பீச் லைனில் ஒரு மாஜிஸ்திரேட் கோர்ட், அங்கே என் மீது மான நஷ்ட வழக்குத் தொடுத்திருந்தார் பால்காரர் ஒருவர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டும் யாதவ ஜாதியைச் சேர்ந்தவர். மிகச் சாதாரணமாகத் தள்ளப்பட வேண்டிய அந்த வழக்கைத் தன் ஜாதிக்காரனுக்குச் சாதகமாக்கி எனக்கு அபராதம் விதித்தார் மாஜிஸ்திரேட்.

கவனிக்க நாதி இல்லாமல், மேல் கோர்ட்டிலும் அது உறுதியாயிற்று.

நானும், என்னுடைய அரசியல் தலைவர் ஒருவரும், ஒரு குறிப்பட்ட தொழிலதிபர் தன் தொழிற்சாலையில் மந்திகரிளுக்கு மது விருந்தளித்ததாகப் பேசி இருந்தோம். நான் அதை எழுதியிருந்தேன்.

அவருடைய சொந்தக்காரர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். அவரிடம் என்னுடைய சிவில் வழக்கு ஒன்று வந்தது. தன் சொந்தக்காரரை நான் அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி, அந்த சிவில் வழக்கை டிகிரிசெய்தார் அந்த நீதிபதி.

பிறகு நான் பிரதம நீதிபதி கோர்ட்டில் அப்பீல் செய்து ஜெயித்தேன்.

இப்போது மத்திய அரசியல் நிபுணராக விளங்குகிற ஒருவர் மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது, ஒரு டில்லி மந்திரியும் மற்றும் சிலரும் போய்ச் சொன்னார்கள் என்பதற்காக, ஒரு மிஷின் வழக்கில் என்னைத் தண்டித்தார்.

பிறகு நான் உயர் நீதிமன்றத்தில் தோழர் மோகன் குமாரமங்கலத்தை வக்கீலாக வைத்து, ஒரு மணி நேரத்தில் அந்த வழக்கை ஜெயித்தேன்.

மற்றும் வேலூரில் ஒரு வழக்கு. பல வழக்குகள்.

இப்போது எல்லா நீதிபதிகளுமே ரிடையராகி விட்டார்கள்.

இப்போது என் மீது வழக்குகள் அதிகமில்லை.

இந்த நாலைந்து ஆண்டுகளில் நான் கோர்ட்டுப் படிக்கட்டு ஏறியதில்லை. இனி அதற்கான அவசியமும் இருக்காது.

இன்றைய நீதிபதிகளில் பலர் உயர்ந்த தத்துவப் பேச்சாளர்கள்.

கடந்த ஆறேழு ஆண்டுகளில் நியமிக்கப்பட்டிருக்கும் அனைவருமே எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மனிதாபிமானிகள், அவர்கள் இளைஞர்களும் இருக்கிறார்கள்.

கள்ளம், கபடம், வஞ்சக நெஞ்சம் அவர்களிடம் இல்லை.

நானும் ஐந்தாண்டுகளுக்கு முந்திய கண்ணதாசனாக இல்லை. அதனால் எல்லாருடனும் சந்தோஷமாகப் பழக முடிகிறது.

கடந்து போன காலங்களை எண்ணிப் பார்த்தால் இப்போதும் எனக்குக் கண்ணீர் வரும்.

வஞ்சகர்களையே என் வாழ்நாள் முழுவதும் சந்தித்திருக்கிறேன்.

யாரோ ஒருவர் கவியரங்கத்திலே பாடியது போல் கவர்னர் அளவுக்குச் சம்பளம் வாங்கி, ராஷ்டிரபதி அளவுக்குச் செலவு செய்திருக்கிறேன்.

அன்றைய சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும் போது பொய், சூது, வஞ்சக நெஞ்சம் பற்றி இந்து மதம் சொன்னதே என் நினைவுக்கு வருகிறது.

மனிதனைத் தெய்வமாக்க இந்து மதம் விரும்புகிறது. ஆனால் மனிதனை மனிதனாக்கும் முயற்சியிலேயே இன்னும் அது வெற்றி பெறவில்லை.

இதயம் பரிசுத்தமாகவும், வார்த்தைகள், உண்மையாகவும் உள்ள ஒரு ஏழையைக் கண்டால், அவன் காலில் விழுந்துவிட நான் தயார்.

உண்மையில் ஏழைகளில் தான் பலர் அப்படி இருக்கிறார்கள். ஓரளவு வசதியுள்ளவன் கூட, குடி கெடுப்பவனாகத் தான் இருக்கிறான்.

தன்னையே கண்ணாடியில் பார்த்த இரணியனைப் போல், பலர் தங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமுதாய உணர்வு என்பது சிறிதும் இல்லை.

நாம் சுமந்து கொண்டிருப்பது உடம்பு தான் என்பதைச் சாகும் வரையில் அவர்கள் நினைப்பதில்லை.

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்களையே, மதம் வளர்க்கிறது.

பொய் சொல்லாத சந்நியாசி, நாணயம் தவறாத சம்சாரி இருவரையும் அது உற்பத்தி செய்கிறது.

நாணயம், இரக்கம், ஒழுக்கம், மனிதாபிமானம் பற்றி இந்து மதம் போதித்த அளவுக்கு, எந்த மதமும் போதிக்கவில்லை.

இன்றைய இளைஞன் அப்படி ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

பத்துப் பேரை நல்லவர்களாக்குவது போல் ஒரு புனிதமான பணி, உலகத்தில் வேறெதுவும், இல்லை. அதற்கு இளைஞர்கள் கைக் கொள்ள வேண்டிய ஒரே நம்பிக்கை, மத நம்பிக்கை.

மதமும், அது காட்டும் தெய்வமும், அதன் வழி வந்த அவதார புருஷர்களுமே, ஒரு நேர்மையான ஞானம் மிக்க சமுதாயகர்த்தாக்கள்.

நன்றி : அர்த்தமுள்ள இந்துமதம்.

Sunday, February 26, 2012

சிவ தரிசனம் செய்ய ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது


சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்;
அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை)
அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி,
அதிலும் சிறந்தது பிரதோஷ காலம்.
பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.
பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை.
பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்;
பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.

Tuesday, February 7, 2012

தைப்பூசத்திருநாளில் முருகனை வணங்குவோம்.


* ஆனைமுகனுக்குத் தம்பியாய் வந்த ஆறுமுகனே! சிவசுப்பிரமணியனே!
ஒளிமிகுந்த பன்னிரு தோள்களைக் கொண்டவனே! பன்னிருகைப் பரமனே!
வெற்றி வேலாயுத மூர்த்தியே! செவ்வேள் முருகனே! திருமாலின் மருகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு மனநலத்தையும், உடல் நலத்தையும் தந்தருள வேண்டுகிறேன்.

* அம்மையப்பர் ஈன்றெடுத்த அருந்தவப்புதல்வா! தேன்சிந்தும் புது மலர்களை விரும்பி அணிபவனே! திருத்தணி முருகனே! கந்தனே! கடம்பனே! கார்த்திகேயனே! சூரபத்மனுக்கு வாழ்வு தந்த வள்ளலே! வெற்றிவீரனே! வள்ளிக்கு வாய்த்தவனே! வாழ்வில் தடைகளைப் போக்கி நல்வழி காட்டுவாயாக.

* குயிலைப் போல இனிய மொழி பேசும் தெய்வானை மணாளனே! வள்ளிநாயகியை காதல் மணம் செய்தவனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! வடிவேலனே! விரைவில் என் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த அருள்புரிவாயாக.
 
* மலைக்கு நாயகனே! மயிலேறிய மாணிக்கமே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் கரை சேர்ப்பவனே! காங்கேயனே! அறுபடைவீடுகளில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவனே! இன்னல்களைப் போக்கி வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நீயே தர வேண்டும்.
 
* உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வெற்றி வேலைக் கையில் ஏந்தியவனே! குற்றம் பொறுக்கும் குணக்குன்றே! சிவகுருநாதனே! எட்டுத்திக்கிலும் அருளாட்சி புரிபவனே! சரவணனே! சேவற்கொடியோனே!
என் வசந்தத்தை வரவழைக்கும்படி சேவலைக் கூவச் செய்வாயாக.

* தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் உமைபாலனே! குறிஞ்சியின் முதல்வனே! துன்பமெல்லாம் போக்கி, ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த குருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.

* தண்டாயுதபாணியே! சிங்கார வேலனே! ஒருமையுடன் தியானிக்கும் பக்தர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! கிரவுஞ்சகிரியை இருகூறாகப் பிளந்த வேலவனே! அகத்தியருக்கு உபதேசித்த என் ஆண்டவனே! எனக்கு நல்லறிவையும், மதிநுட்பத்தையும் கொடுப்பாயாக.

* வேதத்தின் உட்பொருளே! அழகில் மன்மதனை வென்றவனே! பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் வீற்றிருக்கும் குமரப்பெருமானே!
தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே! சரவணப்பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு கனி ஈந்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் மன விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

* சண்முகப்பெருமானே! நான் மட்டுமல்லாமல், என்னைச் சேர்ந்தவர்களான மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் உன் அன்பர்களாக வாழச் செய்வாயாக. உன்னருளால் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும். 

பக்தர்கள் வேண்டும் வரமருளும் ஞானதண்டாயுதபாணியாக பழநியில் முருகன் வீற்றிருக்கிறார். தைப்பூச நன்னாளில் அப்பெருமானை நினைந்து வணங்க இப்பிரார்த்தனையைத் தந்துள்ளோம். பக்தியுடன் படித்து, எல்லா வளமும் பெற்று மகிழுங்கள்.

* ஆனைமுகனுக்குத் தம்பியாய் வந்த ஆறுமுகனே! சிவசுப்பிரமணியனே!
ஒளிமிகுந்த பன்னிரு தோள்களைக் கொண்டவனே! பன்னிருகைப் பரமனே!
வெற்றி வேலாயுத மூர்த்தியே! செவ்வேள் முருகனே! திருமாலின் மருகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு மனநலத்தையும், உடல் நலத்தையும் தந்தருள வேண்டுகிறேன்.

* அம்மையப்பர் ஈன்றெடுத்த அருந்தவப்புதல்வா! தேன்சிந்தும் புது மலர்களை விரும்பி அணிபவனே! திருத்தணி முருகனே! கந்தனே! கடம்பனே! கார்த்திகேயனே! சூரபத்மனுக்கு வாழ்வு தந்த வள்ளலே! வெற்றிவீரனே! வள்ளிக்கு வாய்த்தவனே! வாழ்வில் தடைகளைப் போக்கி நல்வழி காட்டுவாயாக.

* குயிலைப் போல இனிய மொழி பேசும் தெய்வானை மணாளனே! வள்ளிநாயகியை காதல் மணம் செய்தவனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! வடிவேலனே! விரைவில் என் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த அருள்புரிவாயாக.
*
மலைக்கு நாயகனே! மயிலேறிய மாணிக்கமே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் கரை சேர்ப்பவனே! காங்கேயனே! அறுபடைவீடுகளில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவனே! இன்னல்களைப் போக்கி வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நீயே தர வேண்டும்.
 
* உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வெற்றி வேலைக் கையில் ஏந்தியவனே! குற்றம் பொறுக்கும் குணக்குன்றே! சிவகுருநாதனே! எட்டுத்திக்கிலும் அருளாட்சி புரிபவனே! சரவணனே! சேவற்கொடியோனே!
என் வசந்தத்தை வரவழைக்கும்படி சேவலைக் கூவச் செய்வாயாக.

* தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் உமைபாலனே! குறிஞ்சியின் முதல்வனே! துன்பமெல்லாம் போக்கி, ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த குருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.

* தண்டாயுதபாணியே! சிங்கார வேலனே! ஒருமையுடன் தியானிக்கும் பக்தர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! கிரவுஞ்சகிரியை இருகூறாகப் பிளந்த வேலவனே! அகத்தியருக்கு உபதேசித்த என் ஆண்டவனே! எனக்கு நல்லறிவையும், மதிநுட்பத்தையும் கொடுப்பாயாக.

* வேதத்தின் உட்பொருளே! அழகில் மன்மதனை வென்றவனே! பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் வீற்றிருக்கும் குமரப்பெருமானே!
தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே! சரவணப்பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு கனி ஈந்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் மன விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

* சண்முகப்பெருமானே! நான் மட்டுமல்லாமல், என்னைச் சேர்ந்தவர்களான மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் உன் அன்பர்களாக வாழச் செய்வாயாக. உன்னருளால் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும். பக்தர்கள் வேண்டும் வரமருளும் ஞானதண்டாயுதபாணியாக பழநியில் முருகன் வீற்றிருக்கிறார். தைப்பூச நன்னாளில் அப்பெருமானை நினைந்து வணங்க இப்பிரார்த்தனையைத் தந்துள்ளோம். பக்தியுடன் படித்து, எல்லா வளமும் பெற்று மகிழுங்கள்.