Tuesday, October 25, 2011

சத்தியம் தவறாத உத்தமன்

 அரிச்சந்திரனை, "பொய் பேசுபவன்' என்று நிரூபணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், விசுவாமித்திரர், அரிச்சந்திரனைத் தொடர்கிறார்.
 

கானகத்தின் வழியே செல்கின்றனர். இரவு நேரம் நெருங்குகிறது. ஒரு புறம் பசி, தாகம், இந்த நிலையில் அரிச்சந்திரன் களைப்பு மேலீட்டால், சிறிது கண்ணயர்கிறான்.
 

இதை அறிந்த விசுவாமித்திரமுனிவர், அரிச்சந்திரனைப் பார்த்து, "என்ன தூக்கமா?' என்று கேட்டார். அதற்கு மிகப் பணிவாக, "ஆம், சிறிது கண்ணயர்ந்து விட்டேன். மன்னித்தருள்க...' என்று வேண்டுகிறான் அரிச்சந்திரன்..
 

இந்த இடத்தில், நாம் ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும். உலகில், மக்கள் அனைவரும், இம்மாதிரி களைப்பு, அசதி காரணமாக, ஒரு குட்டித் தூக்கம் போடும் போது, "என்ன, தூக்கமா?' என்று நாம் கேட்டால், 

"இல்லையே... விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!' என்று தான் கூறுவர்.

இது நாம், நம்மை அறியாமல் சொல்லும் பொய் 

ஆனால், அரிச்சந்திரன் வாய் தவறிக் கூட பொய் சொல்லவில்லை.

எந்த நிலையில் இருந்தாலும் அதில் இருந்து விலகாது, நிலைத்து நிற்க வேண்டும்.


1 comment:

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

Post a Comment